உச்சநீதிமன்றத்தின் தடை ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்: திருமாவளவன்

உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போல ஆகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட்டுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்குத் தடை என உச்சநீதிமன்றம் கூறுவது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அனிதா மரணத்தையடுத்து தமிழகம் முழுவதும் 7 நாட்களாக பல்வேறு போரட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் போராட்டங்கள் நடத்தத் தடை விதித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Ban on neet protest is against basic right told Thol. Thirumavalavan.

நீதிமன்றத்தின் தடை குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, ''மக்களின் பிரச்சனைகளுக்காக ஜனநாயகரீதியில் போராடி வருகிறோம். அதற்கு தடை விதித்துள்ளது விந்தையாக உள்ளது.

மாணவர்கள் போராட்ட்டதில் ஈடுபட்டு வருவதை குலைக்கும் செயல் இது. இது அரசியல் சாசனத்துக்கு முரணானது. மேலும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அடிப்படை உரிமையை மறுதலிப்பது ஆகும். ஆனால், இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மறுபரிசீலனைக்குட்பட்டது. தீர்ப்பை 15ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்கள். தற்போது உச்சநீதிமன்றம் கருத்து தான் தெரிவித்துள்ளது.

வீட்டுக்குள் போராடி வரும் சபரிமாலாவை போலீசார் போராடக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். தற்போது நடப்பது வெள்ளைக்கார ஆட்சியில் நடந்த கொடுமையை விட மேலாக இருக்கிறது. அறிவித்தபடி, தடையை மீறியும் போராட்டம் நடத்துவோம்.''- இவ்வாறு தொ. திருமாவளவன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+