விவசாயக்கடன் வழங்க லஞ்சம் கேட்ட மேலாளர்... விவசாயியின் புகாரால் பணத்தோடு சிக்கினார்!
விவசாய கடனுக்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபி.ஐ காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்
Recommended Video

வேலூர்: விவசாய கடன் தருவதற்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபிஐ காவல்துறையினர் கையும் களவுமான கைது செய்துள்ளனர். ரூ. 4 லட்சம் கடனுக்கு ரூ. 40ஆயிரம் கேட்ட வங்கி அதிகாரி முன்பணம் வாங்கிய போது சிபிஐயிடம் வசமாக சிக்கினார்.
வேலூர்மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள அரங்கல்துர்கம் கிராமத்தில் பேங்க் ஆப் இந்தியா அரசு வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக ராமநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பார்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி பார்த்திபன் விவசாயம் செய்வதற்காக விவசாய கடன் ரூ.4 லட்சம் தேவையென விண்ணப்பித்திருந்தார்.

ரூ.4 லட்சம் கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் ரூ.4 லட்சம் கடன் வழங்க முடியும் என்று ராமநாதன் கூறியுள்ளார். இதனால் விவசாயி சென்னையில் உள்ள சிபி.ஐ காவல்துறையில் வங்கி மேலாளர் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தார்.
இந்நிலையில் வங்கி மேலாளரிடம் முதற்கட்டமாக விவசாயி பார்த்திபன் ரூ.8 ஆயிரம் முதல் தவணையாக லஞ்சம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த சிபிஐ டிஎஸ்பி சோமய்யா மற்றும் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் வங்கி மேலாளர் ராமநாதனை கையும் களவுமாக கைது செய்தனர்.
ராமநாதனின் ஆம்பூர் காமராஜர் 6 ஆவது தெருவில் உள்ள வீட்டிலும் சிபி.ஐ காவல்துறையினர் சோதனை செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆம்பூர் அருகே சில நாட்களுக்கு முன்னர் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைதான நிலையில் அதே பகுதியில் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications