ப. சிதம்பரத்தை செருப்பு- விளக்குமாறால் அடியுங்கள்: அதிமுக வேட்பாளரின் திமிர் பேச்சு
மானாமதுரை: வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே உள்ள ஆனந்தச்சேரி என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் அவரை விளக்குமாற்றாலும், செருப்பாலும் அடியுங்கள் என்று மக்களை பார்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கூட்டமாக வந்து போலீசில் செந்தில்நாதன் மீது புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து தேர்தல் அலுவலரிடம் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications