சென்னை, பெசன்ட் நகர் தேவாலயப் பெருவிழா தொடக்கம்.. பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
சென்னை: சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் சென்னையில் நடைப்பயணம் மேற்கொண்டதால், பெசன்ட்நகர், அடையாறு மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 44-வது ஆண்டுப் பெருவிழா இன்று (29-ம் தேதி) முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. தொடக்க விழாவினையொட்டி திருப்பவனியாக வரும் 12 அடி நீளமுள்ள அன்னையின் திருவுருவம் தாங்கிய திருக்கொடியை திருத்தல வளாகத்தில் அமைந்து 75 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றப்படுகிறது.

இந்த திருவிழாவின் நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் திருப்பலிகளும், மாலை 5.30 மணிக்கு திருப்பலியின் இறுதியில் தேர்பவனியும் நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் செப்டம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பாக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடக்க விழாவையொட்டி இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதன் காரணமாக சென்னையில் பெசன்ட்நகர், அடையாறு மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதோடு, ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நின்றன. பக்தர்களின் வசதிக்காக சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications