மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுகின்றன - பீகார் மாஜி முதல்வர் ஜித்தன்ராம் மஞ்சி பாராட்டு
நெல்லை வந்த பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி மத்திய, மாநில அரசுகளை பாராட்டிப் பேசினார்.
நெல்லை: பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தென்காசி, கீழபாட்டக்குறிச்சி பிரம்மா ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்பு, மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டிப் பேசினார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி. இவர் முன்பு ஐக்கிய ஜனதா தளத்திலும் அதற்கு முன்பு லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலும் இருந்தார். தற்போது 'ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா' என்ற தனிக் கட்சியை நடத்தி வருகிறார்.

தமிழகத்துக்கு வருகை தந்த ஜித்தன் ராம் மஞ்சி நெல்லை மாவட்டம் தென்காசி அருகிலுள்ள கீழபாட்டக்குறிச்சியில் பிரம்மா ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
வழிபாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜித்தன் ராம் மஞ்சி, ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் மத்தியிலும் பாஜக அரசு சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications