மிகப்பெரிய வெற்றிக்கான தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது… என்கிறார் அன்புமணி
தர்மபுரி: தர்மபுரி தொகுதியில் பாமகவிற்கு மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று தர்மபுரி லோக்சபா தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்திற்கு சென்று வாக்களித்த பின்னர் தான் போட்டியிடும் தொகுதியான தர்மபுரியில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்குச் சென்று அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

தர்மபுரியில் காலைமுதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதைக் கண்டு உற்சாகமடைந்த அன்புமணி ராமதாஸ் அதே உற்சாகத்துடன் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
எதிர்ப்பு அலை
மத்தியிலே மாற்றம் வேண்டும் திமுக அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது.மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
தர்மபுரி வாக்குப்பதிவு
தர்மபுரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உற்சாக வரவேற்பு
தர்மபுரி மிகவும் பின்தங்கிய பகுதி, வேலை வாய்ப்பு உருவாக்குவோம். அதை கூறித்தான் வாக்கு கேட்டுள்ளோம். போகும் இடமெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
திருமங்கலம் ஃபார்முலா
கிராமப்புரங்களில் பணப்பட்டுவாடா... தாறுமாறாக நடைபெற்றது. திருமங்கலம் பார்முலாவை இங்கே கையாண்டுள்ளனர். ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது கேவலம் என்பது இவர்களுக்கு தெரியாதா?
தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது
மக்களிடையே எழுச்சி உருவாகியுள்ளது. அதிக சதவிகித வாக்குப்பதிவுக்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
நேர்மையான வாக்கு
2500 பேருந்துகள் ஜெயலலிதாவிற்கு வந்தனர். அவர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால் இப்போது மக்கள் வாக்களிப்பது நேர்மைக்காக என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications