காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு பாஜக துரோகம் இழைக்கவில்லை.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
Subscribe to Oneindia Tamil
கோவை: காவிரி விவகாரத்தில் பாஜக துரோகம் இழைக்கவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், காவிரி விவகாரத்தில் எந்த துரோகத்தையும் தமிழகத்திற்கு பாஜக இழைக்கவில்லை.
காங்கிரசும், திமுகவும்தான் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தன.

வருமான வரி சோதனை, ஊழல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. எந்த திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்க கும்பலாக கிளம்பி விடுகிறார்கள் என்றார் அமைச்சர் வேலுமணி.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications