கோவில்களை மூடும் அதிகாரிகளை பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பேன்... எச்.ராஜா மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில்களை மூடும் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைக்க என்னால் முடியும்..கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

Recommended Video

    சிங்கார Chennai Sink Chennai ஆக உள்ளது.. H.Raja குற்றச்சாட்டு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்ளிடம் கூறியதாவது: சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளும் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார். ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது. கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை மூடி அதன் மீது கட்டப்பட்டது. சட்டத்திற்கும் நியமனங்களுக்கும் இங்கே மரியாதை கிடையாது.

    ஒருவேலையும் நடக்கவில்லை

    ஒருவேலையும் நடக்கவில்லை

    சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வீட்டுக்கு ரூ5,000 வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள், கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ25,000 தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை.

    கோவிலில் கொள்ளை?

    கோவிலில் கொள்ளை?

    கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது. அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் ஹனிமூன் செல்வது மாதிரி அறுபது நாள் மோகம் முப்பது நாளில் முடிந்து போய்விடும். மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். திமுக அரசு கோவிலில் கொள்ளை அடிக்க கூடாது. உண்டியல் நிரம்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ...கோவில் பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

    அதிகாரிகளுக்கு மிரட்டல்

    அதிகாரிகளுக்கு மிரட்டல்

    அறநிலையத்துறை அசுரக் கூட்டம், அரக்கர்கள் கூட்டம் கோயில்களை பூட்டுவதற்கு முயற்சிக்கின்றன. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் உள்ளது? கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்? கோவில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது. கோவிலில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் வேண்டுமானால் போடட்டும். அதை சந்திக்க தயார்.

    ஜெய்பீம் மகாலட்சுமி காலண்டர்

    ஜெய்பீம் மகாலட்சுமி காலண்டர்

    திமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது. உதாரணம் கொளத்தூர் தொகுதியில் மக்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவிலில் கொள்ளை அடிக்கிற திட்டம் தமிழக அரசால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்தாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் கேவலமாக போய்விட்டதா? அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+