பாஜகவில் மார்ச் 4ல் விருப்ப மனு வாங்குறாங்க... மார்ச் 14,15ல் நேர்காணலாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 4, 5ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 13, 14ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன், சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார் நிலையில் உள்ளது. மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு மக்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தமிழகத்தில் எதிரொலிக்கும். இதனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு, விருப்பமனு மார்ச் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. மார்ச்13 மற்றும் 14 தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும்.
மார்ச் மாதம் தமிழகத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகிறார். மார்ச் முதல் தேதி கமலாலயத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெறும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் களம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், தமாகா என முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் நேர்காணலை நடத்தி வருகின்றன. பாமக வேட்பாளர் பட்டியலையே தயாராக வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக இப்போது விருப்பமனு பெற உள்ளது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னரே நேர்காணலை தொடங்க உள்ளது பாஜக.
சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக விஜயகாந்த் முடிவினை எதிர்பார்த்து பாஜக காத்துக்கொண்டுள்ளது. கூட்டணி முடிவாகும் பட்சத்தில் தொகுதி பங்கீடு முடிந்த பின்னர் அந்த தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனு பெறலாம் என்று நினைத்தார்களோ என்னவோ? விஜயகாந்த் பிடி கொடுக்காத காரணத்தால் தற்போது 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications