பாஜகவில் மார்ச் 4ல் விருப்ப மனு வாங்குறாங்க... மார்ச் 14,15ல் நேர்காணலாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 4, 5ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 13, 14ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன், சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார் நிலையில் உள்ளது. மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு மக்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தமிழகத்தில் எதிரொலிக்கும். இதனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு, விருப்பமனு மார்ச் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. மார்ச்13 மற்றும் 14 தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும்.
மார்ச் மாதம் தமிழகத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகிறார். மார்ச் முதல் தேதி கமலாலயத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெறும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் களம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், தமாகா என முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் நேர்காணலை நடத்தி வருகின்றன. பாமக வேட்பாளர் பட்டியலையே தயாராக வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக இப்போது விருப்பமனு பெற உள்ளது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னரே நேர்காணலை தொடங்க உள்ளது பாஜக.
சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக விஜயகாந்த் முடிவினை எதிர்பார்த்து பாஜக காத்துக்கொண்டுள்ளது. கூட்டணி முடிவாகும் பட்சத்தில் தொகுதி பங்கீடு முடிந்த பின்னர் அந்த தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனு பெறலாம் என்று நினைத்தார்களோ என்னவோ? விஜயகாந்த் பிடி கொடுக்காத காரணத்தால் தற்போது 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications