ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை பா.ஜ.க. வும் புறக்கணிக்கிறது?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து டெல்லியில் நாளை மறுநாள் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூடி முடிவு செய்து அறிகிக்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன.

அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று தகவல் வெளியானாலும், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு கிட்டத்தட்ட காங்கிரசும் வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிக்க பா.ஜ.க,வும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பா.ஜ.க, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார். அப்போது இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பவில்லை விஜயகாந்த் கூறியதாக தகவல் கசிந்தது.
பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இந்த முடிவே எடுக்கப்பட்டதாக விஜயகாந்திடம் தமிழிசை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க, மூத்த தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசித்த பிறகு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க, தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications