பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை, போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கெய்ல் போன்ற திட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவுக்கு இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்க்க அரசு ஆலோசிக்கும்.

அதே நேரம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தோற்றத்தை மிகையாக உருவாக்கி விவசாயிகள் மத்தியில் பீதியை உருவாக்குவது நல்லதல்ல. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யாது.
தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் தெரியவரும் என்றார். அப்போது மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications