50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும்.. தமிழிசை அடடே
50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: 50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது 50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி பிரச்சனையில் சில வாரங்களில் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காவிரி பிரச்னையில் நோயை முற்றவிட்டவர்கள் தற்போது சிகிச்சை தேடுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் நீலகிரியில் ஹெச்.பி.எப் ஆலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications