என்னா வெயிலு! பாப்கட்டுடன் நீச்சல் குளத்தில் முங்கி எழுந்த செங்கமலம்! மேடம் 3 வேளை குளிக்கிறாங்களாம்
சென்னை: என்னா வெயிலு என்னா வெயிலு... நீச்சல் குளத்தில் தலையை முக்கி எழுந்திருக்கும் பாப்கட் செங்கமலம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமல் என்ற பெண் யானை உள்ளது. இதற்கு 34 வயதாகிறது.
இந்த யானைக்கு அதன் பாகன் பாப் கட் செய்துள்ளார். அதனால் அதன் பெயர் பாப்கட் செங்கமலம் என அழைக்கப்படுகிறது. எந்த யானைக்கும் இல்லாத வகையில் செங்கமலத்திற்கு தலையில் அதிக முடி வளர்ந்தது.

அதைத்தான் பாப் கட்டாக அந்த பாகன் வெட்டி விட்டார். இதன் ஹேர் ஸ்டைலை பார்க்கவே தினமும் பக்தர்கள் கூட்டம் வருவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதன் ரசிகர்களாகிவிட்டனர். இந்த யானை அந்த கோயிலில் நடைபெறும் எல்லா விசேஷங்களிலும் பாகன் ராஜகோபாலின் வழிகாட்டுதல்படி கோயிலை வலம் வரும்.
பாகன் சொல் பேச்சை தட்டாத குட் கேர்ள் செங்கமலம். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவர். இரண்டு வேளைகளிலும் யானை குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் ரூ 75 ஆயிரம் செலவில் ஷவர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் ஒன்றை கட்டித் தர வேண்டும் என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு ஆறரை அடி ஆழத்தில் 500 சதுர அடி பரப்பளவில் ரூ 10 லட்சம் செலவில் செங்கமலம் குளிக்க நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தன.
இந்த யானை நீச்சல் குளத்தில் குளிக்கத் தொடங்கியது. தற்போது கோடை காலம் என்பதால் செங்கமலம் 3 வேளையும் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுகிறது. ஹாயாக நீச்சல் குளத்திற்கு வரும் செங்கமலம் தண்ணீரை பார்த்ததும் தலையை மூழ்கி எழுந்தது. அது போல் தும்பிக்கையால் தண்ணீரை பிய்ச்சி அடித்துக் கொண்டது.. இது போதாக்குறைக்கு அந்தம்மாவுக்கு நீச்சல் குள மதில் சுவர் ஏறி ஒருவர் பைப் மூலம் தண்ணீர் பிய்ச்சி அடித்தார்.

ஜில் ஜில் கூல் கூல்.. ஐ யாம் வெரி ஹேப்பி என்பதை போல் தண்ணீரை விட்டு வெளியே வர மனமில்லாமல் திருப்தியாக குளித்து முடித்தது. எப்போது யானை நடக்கும் போது அந்த பாப் கட் அழகாக அசைவிற்கேற்ப ஆடும். ஆனால் தண்ணீரில் நனைந்தவுடன் மண்டையுடன் அந்த முடியும் அப்படியே ஒட்டி கொண்டது. இந்த யானை கடந்த 2003 ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
இந்த யானை அனைவருடனும் நன்றாக பழகும் என்பதால் இதை பாகன் கட்டி வைப்பதில்லை. மேடம் 3 முறை தலைக்கு குளிப்பது வழக்கம். தலையை துவட்டி சீப்பால் வாரி விடுவார் பாகன். தலைக்கு குளித்துவிட்டு தலைமுடி காய்ந்து காற்றில் பறக்கும் போது அப்பப்பா செங்கமலம் சூப்பராக இருக்கும். கண்ணு பட்டுட போகுது திருஷ்டி சுத்தி போடுங்க என பாகனிடம் பக்தர்கள் சிலர் சொல்லிவிட்டு செல்வர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications