சென்னையில் பல இடங்களில் நடுவழியில் பஸ்கள் நிறுத்தம்.. வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதி!
சென்னையில் பல இடங்களில் நடுவழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Recommended Video

சென்னை: பல இடங்களில் நடுவழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் போக்குவரத்து உழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை மாநகரின் பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகள் நிறுத்தம்
சென்னையில் பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், கோயம்பேடு உட்பட பல இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

நடுவழியில் நிறுத்தம்
இதனால் அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். நடுவழியில் பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்கள் பேருந்து ஓடாது என தெரிவித்து சென்றுவிட்டனர்.

மாணவ மாணவிகள் தவிப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். சலுகை கட்டண பஸ் பாஸில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வீடு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்
கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும்
இதேபோல் கும்பகோணம், மதுரை, மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் செய்வதறியாமல் மக்கள் தவித்த வருகின்றனர்.
-
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார்












Click it and Unblock the Notifications