மக்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன்.. இரோம் ஷர்மிளா உறுதி
மக்களுக்காக நெடுங்காலம் போராடிய தன்னை மக்கள் ஏமாற்றிவிட்டார்கள். எனவே, மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொடைக்கானல்; மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் 16 ஆண்டுகள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து போராடிய இரோம் ஷர்மிளா. இதனைத் தொடர்ந்து அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் அவர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், அமைதியான அழகான சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் வசிக்க முடிவு செய்துள்ளேன். நிரந்தரமாக இங்கேயே தங்க முடிவெடுத்துள்ளேன்.

இன்றைய நிலையில் அரசியல் பற்றி குறிப்பாக எந்த திட்டமும் என்னிடம் இல்லை. நீதிக்கான போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் நடத்த உறுதி பூண்டுள்ளேன். அரசியல் நுழைவில் தமக்கு ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்துள்ளது.
தமக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால் அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் துளியும் இல்லை. மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் ஒரு நாள் நிச்சயம் ரத்தாகும் என்று இரோம் ஷர்மிளா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை மணக்க உள்ளதாகவும் இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications