"சிஸ்டர்" ஏன் அப்படி சொன்னார் என ஸ்டாலின் விளக்க முடியுமா?: அன்புமணி
சென்னை: திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று "2ஜி சிஸ்டர்" கூறியது பற்றி மு.க.ஸ்டாலினால் விளக்கம் அளிக்க முடியுமா என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினோ திமுகவினர் யாரும் மது ஆலைகள் நடத்தவில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
If #DMK doesn't have liquor factories, Can @mkstalin answer why your 2G sister offered to shut them if voted to power?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016
திமுகவினர் மது ஆலைகளை நடத்தாவிட்டால், ஆட்சிக்கு வந்தால் அவைகள் மூடப்படும் என்று உங்கள் 2ஜி சிஸ்டர் ஏன் கூறினார் என ஸ்டாலினால் விளக்க முடியுமா?
#DMK Liquor factory statements. Are there 3 DMKs? That of Kalaignar, MKS, Kani?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016
இன்னொரு டிவிட்டில், திமுக மது ஆலை பேச்சுக்கள். 3 திமுக உள்ளதா? கலைஞர், எம்.எஸ்., கனி என? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.