இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை.. சோறு சாப்பிடுகிறவர்களுக்கான பிரச்னை:நடிகர் சசிகுமார்

காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை, சோறு சாப்பிடுபவர்களுக்கான பிரச்சனை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தமிழகம் பூதாகரமாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Cauvery Management board is the only solution for our livelihood: Sasikumar

காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் போன்றவற்றிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து காவிரி, ஸ்டெர்லை விவகாரத்தை பார்க்கலாமே என நடிகர் விவேக் டிவிட்டியிருந்தார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் காவிரி விவகாரம் குறித்து டிவிட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சனை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...? என கேட்டு விவசாயிகளுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+