கர்நாடக தமிழர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு- சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
கடந்த 9-ந் தேதியன்று கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. இப்போராட்டத்துக்கு ஆதரவாக கன்னட திரை உலகத்தினரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் மீது தாக்குதல்
இதனை விமர்சித்து சமூக வலைதளங்களில் சுரேஷ்குமார் என்ற தமிழர் பதிவுகளை போட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒன்று சுரேஷ்குமாரை தாக்கி மன்னிப்பு கேட்கச் செய்தனர்.

கொந்தளிப்பு
கர்நாடகாவில் ஏற்கனவே தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் அதே நிலை தொடரும் என பல அரசியல் கட்சிகள் எச்சரித்திருந்தன.

பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை மயிலாப்பூர் உட்லன்ஸ் ஹோட்டல் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் ஹோட்டலுக்குள் நுழைந்து வரவேற்பறையை உடைத்து நொறுக்கினர்.

பதற்றம்
அப்போது, கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடரும் என எழுதப்பட்ட காகிதத்தை அவர்கள் வீசிச் சென்றனர். இதனால் சென்னையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னட பள்ளிகளுக்கு பாதுகாப்பு
சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கன்னட பள்ளி, அயனாவரத்தில் உள்ள கன்னட பள்ளி, கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை உள்ளிட்டவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications