For Daily Alerts
Just In
ஆபாச பாடல்.... சிம்பு, அனிருத் மார்ச் 21-ல் நேரில் ஆஜராக கோவை கோர்ட் உத்தரவு!
கோயம்புத்தூர்: சர்ச்சைக்குரிய பீப் ஆபாசப் பாடல் தொடர்பாக மார்ச் 21-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாசப் பாடலை பாடி வெளியிட்ட விவகாரத்தில் சிம்பு, அனிருத் ஆகியோர் போலீசிடம் கைதாகாமல் தப்பியுள்ளனர். இதனிடையே நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை பொதுச் செயலாளர் இளங்கோவன் கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் வரும் மார்ச் மாதம் 21-ந் தேதி நேரில் ஆஜராக நடிகர் சிம்பு மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதனால் சிம்பு, அனிருத்துக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
English summary
A Coimbatore court on Tuesday ordered Tamil actor Simbu and music composer Anirudh Ravichandran to appear before it on March 21.
Story first published: Tuesday, January 19, 2016, 22:19 [IST]