For Daily Alerts
Just In
லஞ்சம் வாங்கிய பெட்ரோலியத்துறை இயக்குநர் கைது.. சிபிஐ அதிரடி
கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் பெட்ரோலியத்துறை இயக்குநரை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை: கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் பெட்ரோலியத்துறை இயக்குநரை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, பெட்ரோலியத்துறை முதன்மை இயக்குநர் அசோக்குமார் யாதவை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழக பொது கணக்காயர் அருண்கோயல் லஞ்சப் புகாரில் சிபிஐயால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The CBI has arrested the Director of Petroleum at Chennai in the bribery allegation to permit the gas agency.
Story first published: Saturday, April 7, 2018, 16:26 [IST]