570 கோடி கண்டெய்னர்.. விசாரிக்காமலேயே சிபிஐ அறிக்கை தாக்கல்.. டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு:வீடியோ
கண்டெய்னரில் இருந்த 570 கோடி ரூபாய் குறித்து விசாரிக்காமலேயே அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சிபிஐ என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: ஒரு வங்கி எப்படி விதிகளை மீறி 570 கோடி ரூபாயை வைத்திருக்க முடியும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் குறித்து திமுக சிபிஐ இயக்குநருக்கு புகார் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
தற்போது சிபிஐ, இந்த பணம் வங்கிக்குச் சொந்தமானது என உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

570 கோடியை எப்படி வைத்திருக்க முடியும்?
''ஒரு வங்கி இத்தனை கோடி ரூபாய்தான் வைத்திருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு வங்கி எப்படி 570 கோடி ரூபாய் வைத்திருக்க முடியும்?

போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் பணம் கடத்தல்
அதை மீறி அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு கிளையில் எப்படி அத்தனை கோடி ரூபாயை வைத்திருக்க முடியும்? ஒரு வங்கி கிளையில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை அனுப்பினால், போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த வாகனங்கள் போலீசாரைப் பார்த்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டும்?

சிபிஐக்கு எண்ணம் இல்லை..
அது வங்கிக்கு சொந்தமான பணம் என்று அமைச்சர் சொன்ன பிறகுதான் ஆவணங்களை தயார் செய்து கொடுக்கிறார்கள். அப்போதே சிபிஐ இதுகுறித்து விசாரணை செய்யும் எண்ணம் இல்லை என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள்.
விசாரிக்காமல் சிபிஐ அறிக்கை
நீதிமன்றத்திலேயே, மனுதாரர் வங்கியிலேயே கேட்டுக் கொள்ளலாமே என்னும் போக்கில் தான் கூறினார்கள். ஆனால் நீதிபதிகள் போலி வாகனம் குறித்தும், போலீசை பார்த்து தப்பி சென்றது குறித்தும் நாம் கேள்வி எழுப்பிய பிறகே விசாரிக்க சொன்னார். விசாரிக்காமலேயே நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கையை வழங்கியுள்ளது''. இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
-
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications