570 கோடி கண்டெய்னர்.. விசாரிக்காமலேயே சிபிஐ அறிக்கை தாக்கல்.. டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு:வீடியோ
கண்டெய்னரில் இருந்த 570 கோடி ரூபாய் குறித்து விசாரிக்காமலேயே அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சிபிஐ என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: ஒரு வங்கி எப்படி விதிகளை மீறி 570 கோடி ரூபாயை வைத்திருக்க முடியும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் குறித்து திமுக சிபிஐ இயக்குநருக்கு புகார் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
தற்போது சிபிஐ, இந்த பணம் வங்கிக்குச் சொந்தமானது என உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

570 கோடியை எப்படி வைத்திருக்க முடியும்?
''ஒரு வங்கி இத்தனை கோடி ரூபாய்தான் வைத்திருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு வங்கி எப்படி 570 கோடி ரூபாய் வைத்திருக்க முடியும்?

போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் பணம் கடத்தல்
அதை மீறி அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு கிளையில் எப்படி அத்தனை கோடி ரூபாயை வைத்திருக்க முடியும்? ஒரு வங்கி கிளையில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை அனுப்பினால், போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த வாகனங்கள் போலீசாரைப் பார்த்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டும்?

சிபிஐக்கு எண்ணம் இல்லை..
அது வங்கிக்கு சொந்தமான பணம் என்று அமைச்சர் சொன்ன பிறகுதான் ஆவணங்களை தயார் செய்து கொடுக்கிறார்கள். அப்போதே சிபிஐ இதுகுறித்து விசாரணை செய்யும் எண்ணம் இல்லை என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள்.
விசாரிக்காமல் சிபிஐ அறிக்கை
நீதிமன்றத்திலேயே, மனுதாரர் வங்கியிலேயே கேட்டுக் கொள்ளலாமே என்னும் போக்கில் தான் கூறினார்கள். ஆனால் நீதிபதிகள் போலி வாகனம் குறித்தும், போலீசை பார்த்து தப்பி சென்றது குறித்தும் நாம் கேள்வி எழுப்பிய பிறகே விசாரிக்க சொன்னார். விசாரிக்காமலேயே நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கையை வழங்கியுள்ளது''. இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications