காவிரி விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கையும் மத்திய அரசின் ஒரு நாடகம் தான்!
காவிரி விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கையும் மத்திய அரசின் ஒரு நாடகம் தான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் , திட்ட வரைவு சமர்பிக்கப்பட்ட நிலையில், இதுவும் மத்திய அரசின் ஒரு நாடகமாக இருக்கும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், திட்ட வரைவு அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக 4 மாநிலங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு மே 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி வாரியம் அல்லது குழு அமைக்கவும் மத்திய அரசு தயார் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் திட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் இதுவரை எந்தத் திட்டமும் இல்லை. மத்திய அரசுக்கு உதவுவதன் மூலம் தன்னுடைய மாண்பை உச்சநீதிமன்றம் குறைத்துக்கொண்டுள்ளது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், இதுவும் மத்திய அரசின் நாடகமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத் தேர்தலே காரணம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது. கர்நாடகத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசு, அதே போல் காவிரி திட்டத்திலும் எதோ ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

பொய் சொன்ன அரசு
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பொய் சொன்ன மத்திய அரசின் உண்மை இன்று வெளியே வந்துள்ளது. இதுவரை, அமைச்சர்கள் கூட்டம் எதுவும் நடத்தப்படாத நிலையில், இன்று மட்டும் அறிக்கையை எப்படி தாக்கல் செய்ய முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரம் இல்லாத அமைப்பு
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் எதோ பெயருக்கு நிர்வாகிகளை நிரப்பி, அதிகாரம் இல்லாத அமைப்பயே நிறுவ மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எங்களுக்கு, தண்ணீரை அணையில் இருந்து நேரடியாக திறந்துவிடும் அமைப்பு தான் எங்களுக்கு முக்கியம். மேலும் மே 16ம் தேதி வழக்கை ஒத்தி வைத்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications