வெள்ள பாதிப்பு: தமிழக அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய மத்திய குழு
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் பார்வையிட வந்துள்ள மத்திய குழு தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிட்டுவிட்டு சென்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிட வந்துள்ளது மத்திய குழு.

வெள்ள பாதிப்பு பற்றி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதையடுத்து வெள்ள பாதிப்புகள், சீரமைப்பு பணிகளை பார்வையிட டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் மத்திய குழு திங்கட்கிழமை இரவு சென்னை வந்தது.
அந்த குழுவினர் இன்று பிற்பகல் முதல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளனர். வெள்ளத்தால் மைலாப்பூர் சிவகாமி சாலையில் ஏற்பட்ட விரிசலை முதலில் பார்வையிடும் அவர்கள் பிறகு கோட்டூர்புரம் செல்கிறார்கள். பின்னர் சைதாப்பேட்டை ஆத்துமா நகருக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.
சைதாப்பேட்டையை அடுத்து ஜாபர்கான்பேட்டை, விரும்பாக்கம், வேம்புலிஅம்மன் கோவில் தெரு, வளசரவாக்கம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இன்றும், நாளையும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அந்த குழு டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிக்கும்.
அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நிவாரணம், சீரமைப்புக்காக மாநில அரசுக்கு நிதி அளிக்கும். வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்துள்ள குழுவினர் இன்று காலை தமிழக அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications