எஃப்.எம். வானொலி ஏலம் விவகாரம்.. சன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை : எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் குழு டெல்லியில் கடந்த ஜூலை 14 -ஆம் தேதி கூடியது. அப்போது, மத்திய உள்துறையிடம் இருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெறத் தவறிய சன் குழுமத்தின் விண்ணப்பங்களை அந்தக் குழு நிராகரித்தது.

sun group

பின்னர், சன் குழும நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்துக்கு அனுமதி அளித்தார்.

இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எஃப்.எம். வானொலி ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சன் குழுமம் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், இந்த நிபந்தனையைக் கருத்தில் கொள்ளாமல் சன் குழுமத்துக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, கடந்த ஜூலை 23-ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+