வீறு கொண்ட மக்கள்.. விடாத போராட்டங்கள்.. பற்றி எரியும் மதுரை..மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம்
ஜல்லிக்கட்டு விவகாரத்தின் மூலமாக மக்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மிகப் பெரிய பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
மதுரை: மதுரை மாவட்டம் ஒட்டுமொத்தமாக வீறு கொண்டெழுந்துள்ளது. எந்தப் பக்கம் போனாலும் கொந்தளிப்பு, எங்கு போனாலும் எதிர்ப்பு.. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திகிலடைந்து சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றன மத்திய அரசும் , மாநில அரசும்.
மக்களின் கொந்தளிப்பின் சூட்டைத் தாங்க முடியாமல், அதைத் தணிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளன. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ள மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் மக்களை சமாதானப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன.

ஒரு ரயிலும் ஓடவில்லை
மதுரைக்குள் ஒரு ரயிலும் வர முடியவில்லை. மதுரையிலிருந்து ஒரு ரயிலும் போக முடியவில்லை. மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சிறப்பு ரயிலை அறிவித்துப் பார்த்தனர். ஆனால் அதுவும் ஓடவில்லை.

நாலாபக்கமும் முற்றுகை
மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முற்றுகையிட்டுள்ளனர் மக்கள். எந்தப் பக்கம் போனாலும் மக்கள் கொந்தளிப்பைக் காண முடிகிறது. மதுரை நகரிலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி நிரந்தரமான சட்டம் வரும் வரையில் ஓய்வதில்லை என்று உறுதியாக உள்ளனர்.

கலெக்டர் பேச்சு பலன் தரவில்லை
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை முழுத் தோல்வியடைந்துள்ளது. மக்களின் எழுச்சியை அவரது பேச்சுவார்த்தை தணிக்க தவறி விட்டது.

திரும்பிப் போ
பேச்சுவார்த்தைக்கு வரும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் தரும் ஒரே பதில் நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, இல்லாட்டி திரும்பிப் போங்க என்பது மட்டுமே. இதனால் பேசவே முடியாத நிலையில் உள்ளனர் அதிகாரிகள்.

ஒரு காளையும் கிடையாது
முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியுங்கள், கோவில் காளைகளை மட்டுமாவது அனுமதியுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மருகித் தவித்தனர் மக்கள். ஆனால் அதைக் கூட அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று ஒரு காளையாவது கொடுங்கள் என்று அரசு வந்து மக்களின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம்
மக்களைப் புறக்கணித்தால், மக்களின் கலாச்சாரத்தை மதிக்கத் தவறினால், பாரம்பரியத்தைக் காக்கத் தவறினால், மக்களின் அபிலாஷைகளை அலட்சியப்படுத்தினால் இதுதான் பதிலடியாக கிடைக்கும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications