வீறு கொண்ட மக்கள்.. விடாத போராட்டங்கள்.. பற்றி எரியும் மதுரை..மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம்
ஜல்லிக்கட்டு விவகாரத்தின் மூலமாக மக்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மிகப் பெரிய பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
மதுரை: மதுரை மாவட்டம் ஒட்டுமொத்தமாக வீறு கொண்டெழுந்துள்ளது. எந்தப் பக்கம் போனாலும் கொந்தளிப்பு, எங்கு போனாலும் எதிர்ப்பு.. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திகிலடைந்து சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றன மத்திய அரசும் , மாநில அரசும்.
மக்களின் கொந்தளிப்பின் சூட்டைத் தாங்க முடியாமல், அதைத் தணிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளன. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ள மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் மக்களை சமாதானப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன.

ஒரு ரயிலும் ஓடவில்லை
மதுரைக்குள் ஒரு ரயிலும் வர முடியவில்லை. மதுரையிலிருந்து ஒரு ரயிலும் போக முடியவில்லை. மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சிறப்பு ரயிலை அறிவித்துப் பார்த்தனர். ஆனால் அதுவும் ஓடவில்லை.

நாலாபக்கமும் முற்றுகை
மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முற்றுகையிட்டுள்ளனர் மக்கள். எந்தப் பக்கம் போனாலும் மக்கள் கொந்தளிப்பைக் காண முடிகிறது. மதுரை நகரிலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி நிரந்தரமான சட்டம் வரும் வரையில் ஓய்வதில்லை என்று உறுதியாக உள்ளனர்.

கலெக்டர் பேச்சு பலன் தரவில்லை
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை முழுத் தோல்வியடைந்துள்ளது. மக்களின் எழுச்சியை அவரது பேச்சுவார்த்தை தணிக்க தவறி விட்டது.

திரும்பிப் போ
பேச்சுவார்த்தைக்கு வரும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் தரும் ஒரே பதில் நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, இல்லாட்டி திரும்பிப் போங்க என்பது மட்டுமே. இதனால் பேசவே முடியாத நிலையில் உள்ளனர் அதிகாரிகள்.

ஒரு காளையும் கிடையாது
முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியுங்கள், கோவில் காளைகளை மட்டுமாவது அனுமதியுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மருகித் தவித்தனர் மக்கள். ஆனால் அதைக் கூட அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று ஒரு காளையாவது கொடுங்கள் என்று அரசு வந்து மக்களின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம்
மக்களைப் புறக்கணித்தால், மக்களின் கலாச்சாரத்தை மதிக்கத் தவறினால், பாரம்பரியத்தைக் காக்கத் தவறினால், மக்களின் அபிலாஷைகளை அலட்சியப்படுத்தினால் இதுதான் பதிலடியாக கிடைக்கும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications