கையை கட்டி மலக்கிடங்கில் போட்டதுபோல இருந்தது.. 'இறைவி' பற்றி சாருநிவேதிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'இறைவி' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதைக்காக பலரது பாராட்டை பெற்றுவருகிறது. ஒரு சில விமர்சகர்கள், சில வசனங்களை குறை கூறுகிறார்கள்.
ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதா, மிகவும் காட்டமாக தனது வெப்சைட்டில் இறைவி குறித்து கருத்து கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: "கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்". இவ்வாறு சாருநிவேதிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications