சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மா செய்த சம்பவம்! கதறி அழுத விஜயா.. இது தேவை தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் செய்த செயலை பார்த்து விஜயா கதறி அழுது கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஜய்யாவிற்க்கு எங்கேயும் போக வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது புது பிரச்சனை வந்து இருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கியதால் பைனான்சியர் வீட்டை ஜப்தி செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். குடும்பத்திற்கு தெரியாமல் விஜயாவும் மனோஜும் அண்ணாமலையின் கையெழுத்தை போட்டு பைனான்சியரிடம் கடன் வாங்கி இருந்தனர். இது சிந்தாமணியின் பிளானாக இருந்தாலும் அதில் விஜயா வசமாக சிக்கிக்கொண்டார்.
இப்போது மீனா பூ வியாபாரிகள் சங்கத் தேர்தலில் ஜெயித்து விட்டதால் கடுப்பான சிந்தாமணி மீனாவை பழி வாங்குவதற்காக விஜயா வீட்டை வைத்து கேம் விளையாடுகிறார். 46 லட்சம் பணத்தை எனக்கு உடனே தர வேண்டும் என்று பைனான்சியர் மிரட்டி இருந்தார். அப்போது முத்து அவரிடம் மூன்று மாதம் டைம் கேட்டு இருந்தார். அதற்கு அவரும் ஒரு மாதம் என்றால் ஓகே சொல்லி இருந்தார். ஆனால் கடைசியில் சிந்தாமணி கொடுத்த பிரஷரால் ஒரே நாளில் பணத்தை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
வீட்டிற்கு சீல்
பணத்தை ஒரே நாளில் கட்டாததால் வீடு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அண்ணாமலை மீனாவின் வீட்டிற்கு போய் இருக்கிறார். விஜயா நான் மீனா வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று திமிராக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஸ்ருதி எங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டதும், அங்கு எல்லா வசதியும் இருக்கு என்று போய்விட்டார். ஆனால் அங்கு போன பிறகுதான் விஜயாக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது.
ஸ்ருதி வீட்டில் பிளாக் டீ மற்றும் சாப்பாடு எல்லாமே வித்தியாசமாக இருப்பதால் விஜயாவால் இருக்க முடியாமல் பார்வதிக்கு போன் செய்து நான் உன் வீட்டுக்கு வரேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் பார்வதியோ வந்தால் உன் புருஷனோட என் வீட்டுக்கு வா இல்லன்னா உன் புருஷன் இருக்கிற இடத்தில போய் உக்காரு என்று சொல்லிவிட்டார். இதனால் விஜயாவிற்கு போக இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கதறி அழுத விஜயா
ஏற்கனவே ஸ்ருதி அப்பாவும் அம்மாவும் வெளியே போகும்போது ரூம் கதவை பூட்டிவிட்டு விட்டு சென்றதை பார்த்து விஜயா கடுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதி வீட்டில் பார்ட்டி நடக்கிறது. அதில் ஸ்ருதியின் அப்பா பாட விஜயாவை ஆட சொல்லி எல்லோரும் கிண்டல் பண்ணுகின்றனர். அதனால் விஜயா கடுப்பாகி தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
இனி நடக்கப் போகும் சம்பவம்
இதுவரைக்கும் தன்னுடைய வீட்டில் தான் தான் ராணி என்பதுபோல அராஜகம் பண்ணிக் கொண்டிருந்த விஜயாவிற்கு இப்போ அடுத்தடுத்து பிரச்சனைகளும் அவமானங்களும் வர அழுது கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஜயா அந்த வீட்டில் எப்படி இருக்கிறாரோ என்று முத்து ஃபீல் பண்ணி கொண்டு இருந்த நிலையில் இனி முத்து தான் விஜயாவை மீனா வீட்டுக்கு கூட்டிட்டு போவார் என்று தெரிகிறது. அங்கே போன பிறகு தன்னுடைய நிலைமையை அறிந்து திமிரு பண்ணாமல் இருக்க போகிறாரா? அல்லது மீண்டும் அது குறை இது குறை என்று குற்றம் சொல்லப் போகிறாரா? என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications