தொடரும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு... நீர் வரத்தும் அதிகரிப்பு
தொடரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொடர் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏரிக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வரலாறு காணாத வறட்சியால் செம்பரம்பாக்கம் ஏரியே வறண்டு போய் சென்னை மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. சென்னையைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் வறண்டு போயின.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாத மழையால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம். தற்போது ஏரிக்கு வினாடிக்கு 186 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரியின் நீர்மட்டம் தற்போது 101 மில்லியன் கன அடியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications