சென்னை குண்டுவெடிப்பில் பலியான பெண் பெங்களூர் டி.சி.எஸ். ஊழியை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்புகளில் பலியான இளம்பெண் பெங்களூரில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை குவாகாத்தி எக்ஸ்பிரஸில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஸ்வாதி பரச்சூரி (22) பரிதாபமாக பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்வாதி பெங்களூரில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது. அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்த டி.சி. எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எங்கள் நிறுவன ஊழியை குண்டுவெடிப்பில் பலியானது குறித்து அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். அவரது குடும்பத்தாருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அவரது குடும்பத்தாரை சந்திக்க எங்கள் நிறுவன ஹெச்.ஆர். சென்னை மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications