கணவர் வெட்டியதால் துண்டான ஆந்திரப் பெண்ணின் கையை மீண்டும் இணைத்த சென்னை டாக்டர்கள்!
சென்னை: குடும்பத்தகராறில் கணவர் வெட்டியதால், துண்டான ஆந்திர பெண்ணின் கையை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் இணைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கூடூர், தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டையா. இவரது மனைவி ராஜேஸ்வரி (35). கடந்த 17ம் தேதி கொண்டையாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கோபத்தில் மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார் கொண்டையா. அதனைத் தடுக்க முற்பட்ட போது, ராஜேஸ்வரியின் இடது கையில் வெட்டு விழுந்து, அவரது மணிக்கட்டு துண்டானது.

முதற்கட்ட சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராஜேஸ்வரி. அங்கு அவருக்கு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர்.
சுமார் ஆறு மணி நேரம் போராடி, துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை மருத்துவர்கள் மீண்டும் ராஜேஸ்வரியின் கையுடன் இணைத்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை, டீன் ஐசக் மோசஸ் கூறுகையில், "இன்னும் இரண்டு மாதங்களில், ராஜேஸ்வரி பழைய மாதிரி வேலை செய்யலாம். ஸ்டான்லி மருத்துவமனையில், 30 ஆண்டுகளாக, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு செயல்படுகிறது.

சிறந்த நிபுணர்கள், தேவையான வசதிகள் இங்கு இருப்பதால், சிக்கலான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்ய முடிகிறது. துண்டித்த கை, விரல்களை எவ்வளவு நேரத்தில், எப்படி சுத்தமாக கொண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம். துண்டிக்கப்பட்ட, 6 மணி நேரத்துக்குள் வந்தால் முழு வெற்றி கிடைக்கும்" என்றார்.
தற்போது ராஜேஸ்வரி நலமாக உள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த ராஜேஸ்வரி தனது மணிக்கட்டு மீண்டும் கையுடன் இணைந்திருந்ததைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications