ஏரிகளில் நீர்மட்டம் சரிவு.. குடிநீர் பஞ்ச அபாயத்தில் சென்னை...கருணைக் காட்டுமா ஆந்திரா ?
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது.
சென்னை: வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. இதனால் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சம் வடகிழக்கு பருவமழையாகும்.

இதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை 70 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 20016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை
அதேபோன்று சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் கோடையில் சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனிடையே தமிழக அரசின் சார்பில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் தேவையை சமாளிக்க குறைந்தபட்சம் 3 டி.எம்.சி தண்ணீராவது வழங்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய அடிப்படையில் இவ்விவகாரத்தில் ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு தண்ணீர் வழங்கும் விவகாரம் தொடர்பாக தீவிர பரிசீலனையில் ஆந்திர அரசு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications