சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நாளை டிச.6 வங்கிகள் இயங்கும்
சென்னை: சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், நாளை ஞாயிறு டிசம்பர் 6ம் தேதி அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் செயல்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக சென்னை தனி தீவானது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிய நிலையில், உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வங்கிகளில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் கூட அவர்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

பல வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால், பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு, தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டது.
இதனிடையே மத்திய அரசின் நிதிச் சேவை துறையினர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வங்கி சேவைகள் குறித்து அரசு, தனியார் வங்கிகளின் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். பின்னர் மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் நேரம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications