மதுரை ஆதினத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!
ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
Recommended Video

சென்னை: ஆதினத்துக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலப்பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன் ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு தடை விதித்து அதிரடிப்படி வழங்கினார்.

நித்தியானந்தாவுக்கு தடை
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நித்தியானந்தா நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை தொடரும்
உரிமையியல் வழக்கு முடியும் வரை தடை தொடரும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது.

அரசு அறிக்கை தரவேண்டும்
மதுரை ஆதீனம் உட்பட எந்த மடாதிபதியும் முறைகேடு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட மடாதிபதிகள் மீதான நடவடிக்கை பற்றி அரசு அறிக்கை தரவேண்டும்.

சொத்துக்கள் பறிமுதல்
மேலும் மடங்களுக்கு வாரிசுகள் நியமிப்பது தொடர்பான வழிமுறைகளை 8 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் ஆதீனத்தின் சொத்தை அரசு பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications