தமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை
Recommended Video

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த சுதந்திர தின, தேநீர் விருந்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் பங்கேற்காமல் தவிர்த்து விட்டனர்.
நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களின் போது ஆளுநர் மாளிகையில் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

நேற்று நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதன்பிறகு ஆளுநர், தேனீர் விருந்து அளித்தார்.
இதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழில் தஹில் ரமானி பங்கேற்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை. அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
சமீபத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவியேற்றபோது உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நீதிபதி ரமேஷ் அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications