For Daily Alerts
Just In
திமுக எம்எல்ஏ சக்கரபாணி வெற்றியை எதிர்த்த வழக்கு.. தலைமை தேர்தல் ஆணையர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
ஒட்டன் சத்திரம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவின், சக்கரபாணி பணம் கொடுத்து வெற்றியை பெற்றுவிட்டதாக கூறி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தலைமை தேர்தல் ஆணையரை ஆஜராக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றவர் திமுகவின், சக்கரபாணி. இவர் சட்டசபையில் அக்கட்சிக்கான கொறடாவாகவும் உள்ளார்.
இவர் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றியை பெற்றுவிட்டதாக கூறி, அந்த தொகுதியின் வாக்காளர் கருப்பசாமி என்பவர் ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை என ஹைகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்ட, தொகுதி தேர்தல் அதிகாரிகளும் தலைமை தேர்தல் ஆணையரும், ஜனவரி 9ல் ஹைகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary
Chennai High court ordered chief election commissioner has to appear in the court over election related plea.