ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு: டிராய், மத்திய தொலைத்தொடர்புத்துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிராய், மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிராய், மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்திற்கும் அதன் டவர் நிறுவனத்திற்கும் இடையேயான நிதி பிரச்சனையில் ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் கடந்த வாரம் மனு அளித்தது.

திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பு
ஏர்செல் நிறுவனத்தின் இந்த முடிவு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது

டிராய் அறிவிப்பு
ஏர்செல் நிறுவனம் கடும் கடன் சுமையில் உள்ளதால், அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த நேரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஏப்ரல் 15க்குள் வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாறிக் கொள்ளும்படி ஏர்செல் அறிவுறுத்தி இருந்தது.

ஹைகோர்ட் உத்தரவு
வாடிக்கையாளர்கள் மற்ற சேவையை பெறும் வரை, ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக்கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க டிராய், ஏர்செல் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு துறை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications