போராட்டத்தை கைவிடுங்கள்... மைக்கில் கோரிக்கைவிடுத்த மைலாப்பூர் துணை கமிஷனர்.. கண்டுகொள்ளாத இளைஞர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இன்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை: மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் மைலாப்பூர் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் போராட்டத்தை கைவிட வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் கோரிக்கை விடுத்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் மெரினாவில் திரண்டுள்ள மாணவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். ஒலிப்பெருக்கி மூலம் பேசிய அவர் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்ததை மூலம் தீர்வு காணலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவர்கள் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் தரவில்லை.












Click it and Unblock the Notifications