For Daily Alerts
Just In
கச்சா எண்ணையை அகற்றாமல் கை கட்டி நிற்கும் அரசு.. விளாசும் நெட்டிசன்கள்
தெளிவு இல்லாத தலைவன் இருந்தால் நாம் தினம், தினம் தெருவில் பக்கெட்டோடுதான் நிற்க நேரிடும் என்று சென்னை ஆயில் கலப்பு பற்றி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சாடுகிறார்கள்.
சென்னை: கடலில் கச்சா எண்ணை கொட்டி கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை துறை சார்ந்த வல்லுநர்கள் யாருமே அதை பார்வையிட்டு விஞ்ஞான ரீதியில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காததற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதை, சத்யா வேலுசாமி என்பவர் தனது பேஸ்புக் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். பக்கெட்டுகளில் கச்சா எண்ணையை அகற்றும் பணி ஆபத்தானது என்றும் அவர் எச்சரிக்கிறார். எந்த பிரச்சினைக்கு யாரைக் கொண்டு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தெளிவு இல்லாத தலைவன் இருந்தால் நாம் தினம், தினம் தெருவில் பக்கெட்டோடுதான் நிற்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
English summary
Netizens slams government for not taking enough action to remove oili spill from Chennai sea.