கன மழையால் சென்னை வர வேண்டிய 9 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி
சென்னை: கனமழை காரணமாக, சென்னை வர வேண்டிய 9 விமானங்கள் தாமதமாகின.
சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று வரை பலமாக பெய்து வருகிறது. கொட்டும் மழையால் சென்னையின் பல்லேறு சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக எதிரில் செல்லும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் சென்றதை இன்று காலை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையித்தில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் தாமதமாகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
@ChennaiRains Just leaving airport on Anna Salai. Badly waterlogged. pic.twitter.com/TTmFu6pHYi
— Ramki Sreenivasan (@ra_mki) December 1, 2015
மும்பை மற்றும் டெல்லி மார்க்கத்தில் வர வேண்டிய விமானங்களே இவ்வாறு தாமதத்திற்கு உள்ளாகியுள்ளதாக சென்னை ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.