மழை வெள்ள நிதிக்காக “சென்னையில் திருவையாறு”- 18ம் தேதி தொடக்கம்!
சென்னை: சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவையாறு நிகழ்ச்சி வருகிற 18 ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் "சென்னையில் திருவையாறு" என்ற கர்நாடக இசை மற்றும் நடன நிகழ்ச்சியை லக்ஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான 11வது இசை விழா சென்னை காமராஜர் அரங்கில் வருகிற 18 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடக்கிறது. இதை நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.
பி.எஸ்.நாராயணன் தலைமையில் பஞ்சரத கீர்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை 7 நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மழை வெள்ளத்தால் தயக்கம்:
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராம், லக்ஷ்மண் கூறியதாவது, "மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் நிகழ்ச்சி நடத்த தயங்கினோம்.

நிதி திரட்டிக் கொடுப்போம்:
பல இசை கலைஞர்கள் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிற நிகழ்ச்சியாக இதை நடத்துவோம். இதன் மூலம் நிதி திரட்டி கொடுப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

நிதி சேகரிப்பு:
இதன் மூலம் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை வசூலித்து வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருக்கிறோம். நிகழ்ச்சி நடக்கும் காலத்தில் காமராஜர் அரங்கில் கலைஞர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் நிவாரண நிதி சேகரிக்க இருக்கிறோம். இந்த ஆண்டு பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

கர்னாடிக் சிம்பொனி:
முதல் நாளில் பாடகர்கள் அனில் சீனிவாசன், நரேஷ் அய்யர், சைந்தவி, பிரவின் ஆகியோரின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 இசை கலைஞர்கள் இணைந்து ‘‘கர்நாட்டிக் சிம்பொனி'' இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

மெழுகு சிலை:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் முழு உருவ மெழுகு சிலைய காமராஜர் அரங்கில் வைக்கிறோம். வயலின் இசை மேதை அ.கன்யாகுமரிக்கு பி.சுசீலா ஆழ்வார் பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்குகிறார். நிகழ்ச்சியின் அனைத்து நாட்களிலும் உணவு திருவிழா நடக்கிறது.

இலவச பஸ் வசதி:
40க்கும் மேற்பட்ட உணவகங்கள் தங்கள் ஸ்டால்களை அமைக்கிறது. ரசிகர்களுக்கு பல்வேறு பரிசு திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இரவு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப இலவச பஸ் வசதி செய்திருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications