சென்னையில் திருவையாறு... டிச 18-ம் தேதி தொடங்குகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: லக்ஷ்மன் ஸ்ருதி நடத்தும் சென்னையில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 18-ம் தேதி காமராஜர் அரங்கில் தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சென்னை நகரில் ‘சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக லட்சுமன் ஸ்ருதி இசைக் குழு இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் டிசம்பர் 18-ந் தேதி முதல் டிசம்பர் 25-ந் தேதி வரை சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை லட்சுமன் ஸ்ருதி இசைக்குழு நடத்தவுள்ளது.

டிசம்பர் 18-ந் தேதி மாலை 3 மணிக்கு காமராஜர் அரங்கில் நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வர இசையுடன் தொடங்குகிறது இந்த விழா.

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் குத்துவிளக்கேற்றி மரபுப்படி தொடங்கி வைக்கிறார்.

Chennaiyl Oru Thiruvaiyaaru from Dec 18

இந்த விழாவில் முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

திருவையாற்றில் ஆண்டுதோறும் பலநூறு கலைஞர்கள் பங்கேற்கும் இசை விழாவைப் போல தலைநகர் சென்னையிலும் பிரமாண்ட விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நிகழ்ச்சியை லக்ஷ்மன் ஸ்ருதி நடத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+