Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓகி புயலால் பாதித்த கன்னியாகுமரியில் முதல்வர் எடப்பாடியார் ஆய்வு

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார்.

அண்மையில் கரையை கடக்காமலே ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. இதில் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன.

Chief Minister Edappadi Palanidami examines in Ockhi cyclone affected Kanniyakumari

புயலுக்கு முன்பு கரைக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை இதுவரை பார்வையிடவில்லை அப்பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாய கிராமங்களில் முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார்.

கல்பாடி கிராமங்களில் வாழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+