களை கட்டுகிறது திருப்பரங்குன்றம் .. 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி
11-ந் தேதி திருப்பரங்குன்றம் வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை: வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்த உள்ளார்.
அரசியல் களம் தற்போது பரபரப்பாகி உள்ளது. குறிப்பாக ஆளும் தரப்பு சுறுசுறுப்படைந்து வருகிறது. இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மற்ற கட்சிகள் களப்பணியில் இறங்கிவிட்ட நிலையில் அதிமுக சுணக்கமாக காணப்பட்டதாக கூறப்பட்டது.
[ ஓ.பன்னீர்செல்வம் பிரஸ் மீட்டால் மேலும் சந்தேகம் அதிகரிப்பு! ]

திருப்பரங்குன்ற இடைத்தேர்தல்
ஆனால் இரு தினங்களாக அதிமுக அதிரடியில் இறங்கி கொண்டிருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் இதற்கான முதற்படியினை எடுத்து வைத்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு, ஆளுநர் சந்திப்புகளை அடுத்து, தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார்கள்.

50 வாக்கு வித்தியாசம்
நேற்று முன்தினம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஜெயித்தே தீரும் என்றார். இதனையடுத்து, வருகிற 11-ந் தேதி மீண்டும் முதலமைச்சர் மதுரை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம்
அன்றைய தினம் காலை 10 மணியளவில் மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள பழ மார்க்கெட்டை திறந்து வைக்க உள்ளார். அதே நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார். அன்றைய தினம் மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடாடு ஆகி உள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரை நிகழ்த்த உள்ளார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 15 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூடாகும் களம்
எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பதை இன்னும் ஆணையம் முடிவு செய்யவில்லை. ஆனாலும், திருப்பரங்குன்றம் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், ஆர்கே.நகர் போன்ற ஒரு தோல்வி இனி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதிமுகவினரும் முழுவீச்சு களப்பணிக்கு முடுக்கி விடப்பட்டுள்ளனர். ரெட் அலார்ட்.. கொட்டும் மழை... நடுங்கும் குளிரிலும் ஆளும் தரப்பு அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications