தமிழகத்தில் அசாதாரண சூழல்... டிஜிபியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிஜிபியுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் போலீசார் நடத்திய தடியடிக் காரணமாக சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டு உள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வர் டிஜிபியுடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த தடியடியால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Chief Minister O.Paneerselvam consulting with DGP about the Law and order in Secretariat

மாநிலம் முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்கிறது. சென்னையில் காவல்துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்காரணமாக சென்னை முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு அசாதரணமான சூழல் நிலவி வருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து டிஜிபியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் அபூர்வவர்மா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+