ஜல்லிக்கட்டுக்கான தடை குறித்து சட்டசபையில் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்!!
சட்டசபையில் தமிழக அரசு பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2014ஆம் ஆண்டு அவசர சட்டத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டது ஏன் என
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2014ல் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்து இல்லாமல் போனதாலேயே அதற்கு தடைவிதிக்கப்பட்டதாக கூறினார்.
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடியது. அப்போது ஜல்லிக்கட்டு மீது தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம், சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றியாற்றினார். அப்போது 2014ஆம் ஆண்டு கொண்டு வந்த அவசரச்சட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டது ஏன் என அவர் விளக்கம் அளித்தார்.
2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தில் குடியரசு தலைவரின் கையெழுத்து இல்லாமல் போனதாலேயே அப்போது அவசர சட்டத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். இப்போது கொண்டுவந்துள்ள சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். மேலும் தான் டெல்லி சென்று அவசர சட்டம் பெற முயன்றதையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்தார்.












Click it and Unblock the Notifications