காமன்வெல்த் எதிர்ப்பு: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்த வைகோ கைது… ஜெ.மீது குற்றச்சாட்டு
மதுரை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது பேசிய அவர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா இடிக்க துடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இன்று, ம.தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 21 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.

மதிமுக மறியல்
இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்திற்கு இன்று காலை 6.05 மணிக்கு முதல் ஆளாக மதுரை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்த வைகோ, சென்னைக்குப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தனது தொண்டர்களுடன் மறித்தார்.
கைதான வைகோ
இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வைகோ உட்பட 300க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை கைது செய்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு துரோகம்
கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த சேனியா காந்தி, மன்மோகன் சிங் இவர்களுடன் கைகோர்க்கும் அனைத்து தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான்.
ஜெ.மீது குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, தமிழர்களின் நினைவிடங்களை இடித்ததுபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க பார்க்கிறார்'' என்றார்.

முழக்கமிட்ட வைகோ
தொடர்ந்து அவர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே உள்ளிட்டவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவர், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கடுமையாக கோஷங்களை எழுப்பினார்.
குமுறிய வைகோ
வைகோ ரயில் மறியலை ஆரம்பிக்கும் முன்னதாக, மாநில உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதோடு, வைகோவிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிகிறது. இதனால் கோபம் கொண்ட வைகோ பதிலுக்கு, உன் உடம்பில் ஓடுவது சிங்கள ரத்தமா?, உளவுத்துறைக்கு இங்கு என்ன வேலை, உங்க வேலையை இங்கு காட்டாதீர்கள். நீ தமிழன் இல்லையா?, இறந்த தமிழர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால் இப்படி நடந்துகொள்வாயா? என்று கடுமையாக பேசினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில்
இந்த களேபாரம் அடங்கிய அடுத்த ஐந்து நிமிடத்தில், தேனி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சந்திரன் தலைமையில் 30 பேர் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க அவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மதுரை தமுக்கம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் தாமதம்
மதிமுகவினரின் மறியல் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications