அம்மாவுக்காக ஹெலிபேடை அவசரம் அவசரமாக மாற்றும் அதிமுக
தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 5ம் தேதி வரவுள்ள நிலையில் அவருக்காக அமைக்கப்பட்ட ஹெலிபேடை தற்போது வேறு இடத்திற்கு மாற்றி வருகின்றனராம்.
ஏப்ரல் 5ம் தேதி தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் பரசுரமானுக்காக வாக்கு சேகரிக்க வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவர் ஹெலிகாப்டரில்தான் தொகுதி தொகுதியாகப் போய் வருகிறார்.
இதற்காக அவர் போகும் இடமெல்லாம் ஹெலிபேட் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையிலும் முதல்வருக்காக ஹெலிபேட் போட்டுள்ளனர். இதற்காக புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடை போடப்பட்டு வருகிறது.
அதேபோல அவருக்கான ஹெலிபேட் முன்பு புதிய பேருந்து நிலையப் பகுதியில்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதை மாற்றி சரபோஜி கல்லூரி மைதானத்தில் போட்டு வருகின்றனர்.
ஹெலிபேட் இட மாற்றத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.