காவிரி விவகாரம்: பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை... முதல்வர் குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம்: காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு தீர்மானம், கடிதம் அனுப்பியும் அவரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து விட வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிவிட்டது.

எந்த பதிலும் இல்லை
அதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்த பிரதமருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் இவற்றுக்கு பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

80 லட்சத்தில் மணி மண்டபம்
சேலத்தில் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மணி மண்டபம் கட்டும் பணிக்காக இன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். சுமார் 2100 சதுர அடி பரப்பளவில் ரூ.80 லட்சத்தில் மணி மண்டபம் கட்டப்படவுள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
அடிக்கல் நாட்டு விழாவுக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு தீர்மானம், கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.

நல்ல முடிவு கிடைக்கும்
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பதில் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடுத்துள்ளோம். அது குறித்து மே 3-ஆம் தேதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications