எழிலனுக்கு புதிய பொறுப்பு.. அப்பா பணியாற்றிய குழுவிலேயே பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! ஆஹா!
சென்னை : மாநில திட்டக்குழு உறுப்பினராக திமுக எம்.எல்.ஏ டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் நாகநாதன். இப்போது, அவரது மகனுக்கு திட்டக் குழுவில் பொறுப்பு கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1971ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

மாநில திட்டக்குழு :
முக்கிய துறைகளின் நிபுணர்கள் உறுப்பினர்களாக கொண்டு மாநில திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. மாநிலத் திட்டக் குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் சீனிவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர். திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
எழிலன் நாகநாதன் :
இந்நிலையில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருந்த, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சரான நிலையில், எழிலன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன், மருத்துவர். திராவிட இயக்க சிந்தனையாளரான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில் கருணாநிதி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கருணாநிதியின் உடல்நிலையை உடனிருந்து கவனித்து வந்தார்.

எழிலனின் அப்பாவும் :
எழிலன் நாகநாதனின் தந்தையான பேராசிரியர் நாகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். இவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது நாகநாதனின் மகன் டாக்டர். எழிலனுக்கு திட்டக்குழுவில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஒவ்வொரு முறை பேச்சு எழும்போதும் எழிலன் அமைச்சராக்கப்படுவார் என்ற குரல்களும் எழும், ஆனால், அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் தற்போது முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்!












Click it and Unblock the Notifications