கோவை கல்லூரி மாணவி பலி: உடனடி விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் கே.பி. அன்பழகன்
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டியளித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்றதனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மோசமான சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.

மாடியில் இருந்து கீழ் குதிக்கும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதனால் கல்லூரி மாணவி உயிரிழப்பு பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் இதில் விரைவாக செயல்பட்டு பயிற்சியாளரை கைது செய்துள்ளது.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும். மாணவி உயிரிழந்த சம்பவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications